கல்லை எடுத்ததும் ஓடிப்போக – நீ
ஒரு நாய் அல்ல
தொட்டவுடன் சுருங்கிப்போக – நீ
ஒரு தொட்டாச்சிணுங்கி அல்ல
நுகர்ந்தவுடன் வாடிப்போக – நீ
ஒரு அனிச்சமலரும் அல்ல
வெளிச்சத்தைக் கண்டு ஓடி ஒழிய – நீ
ஒரு கரப்பான் பூச்சியும் அல்ல
துயர் பல வந்தாலும்
இடர் பல தந்தாலும்
எதிர்த்து நிற்பாய்
ஏனென்றால் – நீ
“மனிதன்”