பதமாய் விதை விதைத்து;
பண்பட்டிட நிதம் நீர் இரைத்து;
இரவு பகலென இமையாய் காத்து;
தளிராய் மலராய் ஒளிர்வதை ரசித்து;
கனிவாய் பறித்து,
அலரினை மாலையாய் தொடுத்து,
சூடும் வேலையிலே….
சுவடின்றி வாடிப் போகின்றாயே…..
தேடி தீர்த்தாலும் பிழையில்லை ,
உயிர் தேடியும் விடையில்லை ,
கரைந்ததோடிட வழியில்லை .
விதியின் சதியாகி ,
இறுதியில் மடிந்தது மலரல்ல,
உறுதியுள்ள எந்தன் மனம்.
good one….