மலர்

பதமாய் விதை விதைத்து;

பண்பட்டிட நிதம் நீர் இரைத்து;

இரவு பகலென இமையாய் காத்து;

தளிராய் மலராய் ஒளிர்வதை ரசித்து;

கனிவாய் பறித்து,

அலரினை மாலையாய் தொடுத்து,

சூடும் வேலையிலே….
சுவடின்றி வாடிப் போகின்றாயே…..

தேடி தீர்த்தாலும் பிழையில்லை ,
உயிர் தேடியும் விடையில்லை ,
கரைந்ததோடிட வழியில்லை .

விதியின் சதியாகி ,

இறுதியில் மடிந்தது மலரல்ல,
உறுதியுள்ள எந்தன் மனம்.

One thought on “மலர்

Leave a comment